நானில்லாத நாட்களில்
என் தெருவில்
எதைத் தேடி
உன் உயிர்
கையில் வீளக்குடன்
கால்வலிக்க நடக்கிறது?
பூட்டியக் கதவுகள்
உடைந்த சன்னல் கண்ணாடிகள்
து£சி அடைந்த முற்றம்
எப்போதோ நான் வரைந்த
செம்மண் கோலம்
உடைந்த திண்ணை
உயரமாய் வளர்ந்த தென்னை
இன்னும் அறுந்து விழாமல்
காற்றில் ஆடும் ஊஞ்சல்..
தேடிப்பார்..
இதில் எங்காவது
ஒளிந்துகொண்டிருக்கும்
உனக்கான என் அடையாளம்