உயிரின் தேடல் - புதியமாதவி

Photo by Pawel Czerwinski on Unsplash

நானில்லாத நாட்களில்
என் தெருவில்
எதைத் தேடி
உன் உயிர்
கையில் வீளக்குடன்
கால்வலிக்க நடக்கிறது?

பூட்டியக் கதவுகள்
உடைந்த சன்னல் கண்ணாடிகள்
து£சி அடைந்த முற்றம்
எப்போதோ நான் வரைந்த
செம்மண் கோலம்
உடைந்த திண்ணை
உயரமாய் வளர்ந்த தென்னை
இன்னும் அறுந்து விழாமல்
காற்றில் ஆடும் ஊஞ்சல்..

தேடிப்பார்..
இதில் எங்காவது
ஒளிந்துகொண்டிருக்கும்
உனக்கான என் அடையாளம்
புதியமாதவி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.