உயிரின் தேடல் - புதியமாதவி

உயிரின் தேடல் - Tamil Poem (தமிழ் கவிதை) by புதியமாதவி

Photo by Pawel Czerwinski on Unsplash

நானில்லாத நாட்களில்
என் தெருவில்
எதைத் தேடி
உன் உயிர்
கையில் வீளக்குடன்
கால்வலிக்க நடக்கிறது?

பூட்டியக் கதவுகள்
உடைந்த சன்னல் கண்ணாடிகள்
து£சி அடைந்த முற்றம்
எப்போதோ நான் வரைந்த
செம்மண் கோலம்
உடைந்த திண்ணை
உயரமாய் வளர்ந்த தென்னை
இன்னும் அறுந்து விழாமல்
காற்றில் ஆடும் ஊஞ்சல்..

தேடிப்பார்..
இதில் எங்காவது
ஒளிந்துகொண்டிருக்கும்
உனக்கான என் அடையாளம்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.