மனப்பறவை - புதியமாதவி

Photo by Pawel Czerwinski on Unsplash

நித்தம் நித்தம்
அம்புகள் பாய்ந்த வலியில்
துடிக்கிறது

ரத்தம் கசிய கசிய
சன்னல் கம்பிகளின்
இரும்பு பிடிகளுக்கு
நடுவில்
கதவுகள் திறக்க
காத்திருக்கிறது

போதும் போதும்
பறந்தது போதுமென்று
தடவிக்கொடுக்கிறது
காற்று.

சிறைகளை உடைத்து
வெளியில் வந்துவிடு
இரவோடு இரவாக
அழைக்கிறது
நிலவு.

ஆகாயமே சிறையாகிப் போனதால்
சிறகுகளை எரித்த
நெருப்பின் வெளிச்சத்தில்
கூண்டுக்குள் இடம்தேடும்
மனப்பறவை
புதியமாதவி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.