இரண்டு தடவைகள் வாழ்கிறாய் - பர்ஸான்.ஏ.ஆர்

Photo by FLY:D on Unsplash

அனைத்து சலனங்களினையும் அடக்கி!
என் மூச்சைத் திருடி!
நீ அதிர்வுகளோடு எழுந்து போனாய்.!
இப்படியிருக்காது என்ற என் ஆசைகள் மீது!
உன் ஆளுமையும் அதிரவைக்கும் விம்பல்களும்!
உருக்குலைய வைத்து!
என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறது.!
உன்னை முதலினைப்படுத்தி!
என்னை விட உன் மகிழ்விற்கே இவையெல்லாமென!
பல கோடி தடவை கெஞ்சினேன்.!
உன் அசட்டுக் காதுகளும்!
உன்னிலைகளே அனைத்தும் என்ற கனவுகள்!
என் உடலின் இரு அந்தங்களிலும்!
மீசான் கட்டைகளை செருகி விட்டது.!
எனக்கேயான எனது அனைத்தினையும் மறுத்தாய்.!
உன் பிடிவாதங்கள் நிறைந்த உலகில்!
நீ இட்டுள்ள உறுதியான உனது நிலைகளில்!
என்னையும் ஓடவிட்டு!
நீ வாழ்வதை பார்த்துக் கொண்டிருக்கிறாய்.!
நீ உலகில்!
இரண்டு தடவைகள் வாழ்கிறாய்.!
!
-பர்ஸான்.ஏ.ஆர் !
09.06.2008
பர்ஸான்.ஏ.ஆர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.