வாழ்க்கை - முல்லைக்கேசன்

Photo by laura adai on Unsplash

வாழ்தல் என்பது உடலை!
மண்ணுக்கு!
உரித்தெழுதிக் கொடுத்துவிட - அது!
ஒன்றும்!
சரணாகதி யல்ல!
பிரசவிக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும்!
பிறர் சபிக்கச் சபிக்க!
மடிந்து போவதும்!
ரோஜா மலரொன்று மங்கையின்!
குழலுக்கென்று பறிக்கப் பட்டு!
பதாகைகளுக்கு தாரை!
வார்ப்பதும்!
ஒன்று!
மேட்டுக் குடிகளெல்லாம் அதிகாரத்!
தந்திகளை!
அடுத்தவன் தலையிலும்!
அடுத்ததை நெஞ்சிலும் இழுத்து!
இறுகக் கட்டி!
சோம பானத்திற்கு சொகுசான!
இசையொன்றாய்!
கட்டை விரல் கொண்டு கடின அழுத்தொன்றில்!
இசைக்கு கோலமிடும்!
இறுமாப்புக்!
கலைஞர்கள்!
அதிகாரப் பெருவாரி ஒரு நாள்!
இடிந்து விழும்!
அன்றொரு பொழுதில் அதன் அருகில்!
சென்று!
நுகர்ந்து பாருங்கள்!
அடிமைகளையும், அப்பாவிகளையும்!
அடி நெஞ்சில் !
அழுத்தி அழுத்தியே வெடித்துச்!
சிதறிய மனிதக்!
குலத்தின்!
நெஞ்சுக் கூடுகள் காறித் துப்பிய இரத்தச்!
சுவாலைகள் இன்றும்!
அணையாமல் ஆடி அசைகின்ற!
தியின் மணம் உம்!
நாசிகள் வழினுளைந்து துன்பங்களை!
துலக்கிவிடும்!
ஆட்சியாளன் ஒவ்வொருவனும் அத்திபாரம்!
என நினைப்பது!
கல்லுக்காய் சிதைகளையும்!
நீருக்காய் இரத்தக்காறைகளையும்!
தான்!
கால்ம் போயினும்!
கசிகின்ற வலிகள் இன்னமும்!
கறை படியாத!
பளிங்குகளாய்!
காயத்தின் விளிம்புகளுக்கு களிம்பு!
பூசுகின்றன!
அடிமேல் அடி அடித்தும் அசையாத!
உரு ஒன்று!
நிலையாக நிலத்து விடின்!
அடுத்த நாள்!
உதயம் அதற்கு பெயரொன்றை தரும் அடித்தவன்!
யாரென்றும்!
அதிலேயே பொறித்திருக்கும்!
சீறுகின்ற சிறுத்தையும்!
மாறுகின்ற மாற்றமும்!
மாறும் வரையிலும் மனைவிக்கும் தெரியாது!
இவையெல்லாம் கீழேகிடந்து!
கால்களில்!
இடறுப்பட கவிதைப் பொலிவுக்கும் கவர்ச்சி!
உயர் நயப்புக்குமாய்!
சொற்களுக்கும், வரிகளுக்கும் பலவந்த முடிச்சுப்!
போடுபவன் கவிஞன் என்ற பெயரை!
களவாய்!
உறவு கொள்பவன்.!
முல்லைக்கேசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.