நான் எங்ஙனம் - லலிதாசுந்தர்

Photo by the blowup on Unsplash

என் உடல்செல்கள் அனைத்தும்!
இயக்கமின்றி துருபிடித்துவிட்டது!
உன் பார்வைமின்சாரம் பாயந்ததால்!
நெருப்பை தீண்டினால் சுடுமென்ற!
தொடுவுணர்வு இழந்து கைகள்தொடுகின்றன!
நீ என்னருகேயின்றி!
காதல் என்பது நோயில்லை!
காதல் என்பது தவமில்லை!
காதல் என்பது ஞானம்!
அதுவே அனைத்தும்!
தென்றலின் காதலின்றி மழையில்லை!
சிப்பியின் காதலின்றி முத்தில்லை!
கரையின் காதலின்றி கடலில்லை!
இயற்கையே இங்ஙனமெனில்!
நான் எங்ஙனம்!
நீ என்னருகிலின்றி.........!
- லலிதாசுந்தர்
லலிதாசுந்தர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.