நினைவுகள் - ச .மௌனிஷண்முகம்

Photo by Scott Webb on Unsplash

நம் நினைவுகளை பாதுகாப்பாய்
இதயத்தில் வைப்பேன் வேண்டாம்
இதயம் துடிக்க மறந்தால் நம்
நினைவுகளுக்கு என்னாவது...

நினைவுகளை விழிகளுக்குள்
வைத்து இமைகளை காவல்
வைப்பேன் வேண்டாம் அழுகையில்
நனைந்துவிட்டால் என்னசெய்வது ..

சேகரித்த நினைவுகளைகாற்றோடு
அனுப்பிவைப்பேன் இறந்தபின்னும்
நினைவுகளோடு வாழ்வதற்கு வேண்டாம்
மறுபிறவி இருந்தால் காற்றில் கரைவது கடினம் ...

நம் நினைவுகளை என்னதான் செய்வது
விதையோடு சேர்த்து நட்டு செல்வோம்
நாம் சென்ற பிறகும் வளர்ந்துக்கொண்டே
இருக்கும் மரத்தோடு சேர்ந்து நம் நினைவுகளும் ...
ச .மௌனிஷண்முகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.