அம்மாவின் நினைவுகள் - திவ்யபாரதி நடேசன்

Photo by Steve Johnson on Unsplash

நிலவின் வதனத்தை கண்ட நொடி முதல்
உன் நினைவுகள்!
இரவு பகல் பாராமல் கனவிலும்
உன் ஞாபகங்கள்!
வருடங்கள் கடந்தாலும் மூழ்கி தவிக்கிறேன்
உன் நினைவளைக்குள்!
உன்னை பிரிந்த நாள் முதல் இன்றுவரை
உன் பாசத்திற்கு இணை யாருமில்லை!
உன் வார்த்தை மொழிகள் மனதில் புதைந்து
கிடக்கின்றன பொக்கிஷமாய்!
நீ இல்லாத இந்த வாழ்க்கை நரகமாய்
உள்ளது அம்மா!
உன் அன்பிற்கு ஏங்கி தவிக்கும் எனது ஏக்கங்கள்
ரனரனமாய் கொல்கிறது!
இன்றோ உனது நினைவஞ்சலி;அதனை
நினைத்து என் மனம் சின்னாபின்னம் ஆகிறது!
நிஜத்தில் பார்த்த என் உயிரை படத்தில்
பார்த்து வணங்க என் மனம் மறுக்கிறது!
உன்னை கட்டி அனைத்து,மகிழ்ச்சியில்
மிதந்த நாட்கள் மீண்டும் வேண்டுமென்கிறது!
நிலவிலும்,கனவிலும் தெரியும் உன் முகம்
நிஜத்திலும் பார்த்திட ஏங்குகிறேன்!
என்னிடம் திரும்பி வா அம்மா!!
திவ்யபாரதி நடேசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.