விண்ணும் மண்ணும் - வ.ந.கிரிதரன்

Photo by Tengyart on Unsplash

வ.ந.கிரிதரன்!
விரிந்து கிடக்குமிந்த விசும்பு!
ஓர் உளவியல் நிபுணரைப் போல்!
பலருக்கு அறிவுரை பகரும் அதிசயத்தினைப்!
பார்த்து ஒவ்வொரு முறையும்!
அதிசயித்துப் போகின்றேன்.!
'வானத்தைப் போல்.....'!
அப்பொழுதெல்லாம் இவ்விதம் நான்!
எனக்குள்ளேயே அடிக்கடி கூறிக்!
கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சியில்!
பூரித்துப் போகின்றேன்.!
இவ்விதமான வேளைகளில் ஒரு மாபெரும்!
நூலகத்தினைப் போல் இந்த வானம்!
எவ்வளவு விடயங்களைத் தன்னுள்!
தாங்கி வைத்திருக்கின்றதென்பதை!
உணர்ந்து கொள்கின்றேன்.!
கற்பதற்கெவ்வளவு உள.!
கற்பதற்கெவ்வளவு உள.!
காலவெளி நூலகத்தில்தான்!
கற்பதற்கெவ்வளவு உள.!
அளவுகளுக்குள்ளிருந்து!
ஆகாயம் பார்க்கும் மண்பார்த்து!
அப்பொழுதெல்லாம் இந்தவான்!
தனக்குள் நகைத்துக் கொள்ளுமோ!!
அப்பொழுதெல்லாம் கீழ்க்கண்டவாறு!
நினைத்துக் கொள்வேன்:!
'படைகளுக்குள்ளோரிருப்பு! மேலும்!
படையெடுப்பெதற்கு?'!
ஆகாயத்தின் இயல்புகளில் சில:!
அகலம்! விரிவு!!
அவை கூறும் பொருளெம்!
அகம் உணர்தல் சாத்தியமா?!
'அகத்தின் விரிவில், அகலத்தில்!
மண்ணிலின்பம்! அட மானுடரே!'!
தன்னியல்பினுள் விடைபொத்தி வைத்திருக்கும்!
விசும்பு மண்ணின் கேள்விகள்!
அனைத்துக்கும்.!
விண்ணிலிருந்து மண்!
கற்பதற்கு நிறைய உள.!
கற்பதற்கு நிறைய உள
வ.ந.கிரிதரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.