சொந்தங்களிடமான சொந்தம் - மு. பழனியப்பன்

Photo by FLY:D on Unsplash

சொந்தங்கள் எரிச்சலைத் தருகின்றன !
விசயம் கேட்கும் காதுகள் !
கூர்ந்து நோக்கும் கண்கள் !
எப்போது சிரிக்கலாம் என நம் !
சருக்கலை எதிர்பார்த்து நிற்கும் குரோத மனம் !
தான் மட்டுமே உயர்வு !
மற்று எவர் செய்தாலும் சரியே இல்லை !
எனப் பேசும் பொறமைக் குணம் !
இவர்களை நம்பி செய்யாமல் இருக்கவும் !
முடியாது !
செய்தும் தொலைக்க முடியாது !
என்ன செய்வது !
இவர்களுடான பந்தம் !
பாதியில் நின்றுவிடக் கூடாதே !
சொல்லியும் சொல்லாமலும் !
விசேஷத்தை முடித்துவிட்டோம் !
இனி அவர்கள் விசேஷம் வரும் !
அதுபோது நாம் வைத்துக் கொள்வோம்
மு. பழனியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.