இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன்

Photo by Paul Esch-Laurent on Unsplash

இருப்பொன்று போதாது !
இருத்தல் பற்றியெண்ணி !
இருத்தற்கு! !
- வ.ந.கிரிதரன் - !
!
படைப்பின் நேர்த்தியெனைப் !
பிரமிக்க வைத்திடுதல்போல் !
பாரிலெதுவுமில. !
வீழும் மலர், ஒளிரும் சுடர், !
துணையில் களிப்புறும் இணை, !
நிலவுமனைத்திலுமிங்கு !
நிலவும் நேர்த்தியென் !
நினைவைக் கட்டியிழுத்தல்போல் !
நினைவெதுவுமில. !
முறையெத்தனையெனினும் !
மறையாத நினைவுப் புயல்! !
இருப்பு, இன்னும் புதிர் மிகுந்து !
இருந்திடுமோ? இல்லை !
இதுவும் 'நிச்சயமற்றதொரு !
தற்செயலின்' !
சாத்தியம் தானோ? !
இருப்பொன்று போதாது !
இருத்தல் பற்றியெண்ணி !
இருத்தற்கு! !
---------------------------------------------------------- !
இருப்பதிகாரம் !
- வ.ந.கிரிதரன் - !
நிலை மண்டில ஆசிரியப்பா! !
!
வானினை நிலவினை வரையினை மடுவினை !
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும் !
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை !
மீறிட முடியா சிந்தையை மேலும் !
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள் !
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும் !
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும் !
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா? !
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்? !
விரியு மண்ட மடக்கு மண்டம் !
அதனை யடக்க மற்றோ ரண்டம். !
வெறுமை வெளியில் பொருளின் நடனம். !
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு. !
இதுவும் நிசமா நிழலாக் கனவா? !
நனவும் கனவா? கனவும் நனவா? !
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள். !
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்! !
இருப்பு அறிந்திட தேடித் தொடரும் !
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே! !
இதனை அறிதல் புரித லெவ்விதம்? !
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக் !
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை !
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை !
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்? !
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய் !
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம் !
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்? !
செயற்கை சமைத்திட சிந்தை தந்த !
செயலினால் தானோ செகத்தினில் துயரோ? !
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க !
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட !
பண்பினால் தானோ பாரினில் பகைமை? !
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று !
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு !
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து !
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை !
வந்திடு மென்றால் அதுவே போதும். !
வேறு.... !
அந்திக் கதிரின் சிவப்பில் நாளும் !
சிந்தை யிழந்து இருத்த லின்பம்! !
இரவில் வானில் நீந்தும் மீன்கள் !
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும். !
விசும்பும் மதியும் கதிரும் காற்றும் !
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும் !
படைப்பின் திறனை பறையே சாற்றும். !
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும். !
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும் !
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும். !
உறவினை உதறி யுண்மை அறிதல் !
துறவென ஆயிடு மதனா லதனை !
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே !
உண்மை காணலே சிறந்ததோ தறியேன். !
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன். !
உளையு முளத்தின் உளைவை எவ்விதம் !
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?
வ.ந.கிரிதரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.