ஆக்ரமிப்பு... நச்சுத்தனம்.. பெண் - தஸ்லீமா நஸ் ரீன்

Photo by engin akyurt on Unsplash

ஆக்ரமிப்பு... நச்சுத்தனம்.. பெண்!
1.ஆக்ரமிப்பு!
--------------!
மனித இயல்பு என்பது!
நீங்கள் உட்கார்ந்தால், ''உட்காராதீர்'' என்பார்கள்!
நீங்கள் நின்றால், ''என்னவாயிட்டு? நட'' என்பார்கள்!
நீங்கள் நடந்தால், ''வெட்கப் படுகிறேன், உட்கார்'' என்பார்கள்!
நீங்கள் படுத்து விட்டால், ''எழுந்திரு'' ஆணையிடுவார்கள்!
நீங்கள் படுக்கவில்லை என்றால், தயங்காமல் ''படு'' என்பார்கள்!
நான் எழுந்தும் உட்கார்ந்தும் நாட்களை !
விரயமாக்கிக் கொண்டிருக்கிறேன்!
நான் சாகப் போனால் ''வாழ்' என்பார்கள்!
நான் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால்!
''வெட்கம், செத்துப்போ'' என்பார்கள் நிச்சயம்.!
!
2.நச்சுத்தனம்!
----------------!
பாம்பின் இரு காளாத்திரியைவிட!
இருமுகம் கொண்ட மனிதன் !
நச்சுத்தன்மையானவன்!
பாம்பால் கடி பட்டால்!
நச்சை எடுத்து விடலாம்!
மனிதனால் கடிபட்டால்!
அதுவே முடிவாகிறது.!
!
3.பெண்!
----------!
பிறப்பு!
உலக ஜீவராசிகளில்!
பெண்பால் பிறப்பு நலமான ஒன்று!
ஆனால் மனித இனத்தில் மற்றும் மாற்றம்!
குழந்தைப்பருவம்!
அவள் பிறந்ததிலிருந்து!
வீட்டின் ஒரு மூலையில் வைக்கப் படுகிறாள்!
அங்கேயே வாழப் பழகுகிறாள்!
விடலை!
தலைமயிரை இறுக்கக் கட்டு!
பார்வையை இங்குமங்கும் அலையவிடாதே!
அரும்பும் முலைகளை கவனமாக மூடிவை!
பெண்களை சங்கிலியால் கட்டிவை!
வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வேண்டுமானல் !
போக அனுமதிக்கலாம், அவ்வளவுதான்!
இளமை!
ஆண்கள் கன்னித்திரைகளை தேடுவார்கள்!
அதனை அடித்துக் கிழிக்க வேண்டி!
சிலர் காதலென்ற பெயரில்!
சிலர் கல்யாணமென்று!
வயோதிகம்!
இறுகிய மெல்லிய தோல் சுறுங்கிவிடும்!
மாதவிடாய் வலி எப்பொழுதுக்கும் நீங்கிவிடும்!
சொன்ன வார்த்தைகள் வந்து அறையும்!
மரணம்!
தொல்லைகளிலிருந்து விடுபடலாம்!
இயற்கையின் நிதர்சனத்தில் உலக ஜீவராசிகளில்!
பெண்பால் இறப்பு நலமான ஒன்று!
!
ஓடு! ஓடு!!
நாய்க்கூட்டம் உன்னை துரத்துகிறது!
கவனம், ராபிஸ்!
ஆண்களின் கூட்டம் உன்னை துரத்துகிறது!
கவனம், மோகநோய்
தஸ்லீமா நஸ் ரீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.