யார் கொடியவர்கள்?.. காத்திருக்கின்றது - தேவி

Photo by Sajad Nori on Unsplash

01.!
யார் கொடியவர்கள்?!
---------------------------!
பெண்ணாக பிறந்து !
பெண்ணை விரும்ப வைத்த !
இயற்கையின் கொடுமை !
எதற்கு எனக்கு?!
எல்லாவற்றையும் !
இலகுவில் மறக்கலாம் !
என்று கூறுபவர், !
நிலை உணர்ந்து தான் !
இப்படி கூறுகிறார்களா?!
இவர்கள் இயற்கையை !
விட கொடியவர்களாயிற்றே!!
அப்படி தான் நினைத்தேன் !
ஒரு பொழுது! - ஆனால் !
விரும்பியவளின் !
அன்பே கிடைக்காத போது, !
அந்த காதலை வேறு வழியின்றி !
கைவிட வேண்டிய நிலை!
மட்டும் எம்மாத்திரம் !!
இப்போது !
யார் தான் கொடியவர்கள்?!
02.!
காத்திருக்கின்றது..!
------------------------!
உன் விழிகளில் !
இனம் தெரியாத மின்னல் கண்டு !
என் கண்கள் கூசாதா?!
இவ்வுலகில் தொலைந்து நிற்கின்ற எனதுயிரின் ஆத்மா !
என் கண்களினூடு எட்டிப் பார்த்து உன் அன்பை தேடுகிறது!
ஓ! என அழுகிறது ஜீவாத்மா. எடுத்துறைப்பதற்க்கு !
வார்த்தைகள் இன்றி தவிக்கிறது.!
இருந்தும், !
இந்த உயிர் கொண்ட உடலால் !
ஆத்மாவின் கீதத்தை இசைத்து !
உன்னிடம் தஞ்சம் புகுகிறது.!
வாழ்வின் எல்லையில் !
உன் ஆத்மாவோடு !
என் ஆத்மா சேர்ந்து கரைய காத்திருக்கிறது
தேவி

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.