தாலாட்டு - தேவி

Photo by Bastien Jaillot on Unsplash

 
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
என் கண்மணியேக் கண்ணுறங்கு
தாழம்பூச் சிரிப்பாலே
தரணியையே மயக்கியதில்
தங்கமே நீ அயற்ந்திருப்பாய்
தளிர்க் கொடியே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிராரோ... 
அன்னதைப்போல் உன் நடையாலே
அனைவரையும் கவர்ந்ததிலே
அனிச்சமலர்ப் பாதம் நொந்திருக்கும்
அஞ்சுகமேக் கண்ணுறங்கு 
ஆராரோ ஆரிராரோ... 
மயில்ப்போல் நீ அசைந்தாடி
மானினத்தை அசத்தியதை
மெச்சிக்கொள்ள வார்த்தையில்லை
மணிக்கொடியேக் கண்ணுறங்கு 
ஆராரோ ஆரிராரோ...  
பாரின் துயறமெல்லாம்
பண்பாடி நீ துடைத்ததிலே
பேறின்பம் பெறுகியதே
புதுமலரேக் கண்ணுறங்கு 
ஆராரோ ஆரிராரோ...
ஈடில்லாச் செல்வமாய்
என்னிடத்தில் கிடைத்தாயே
என்னாலும் காத்திடுவேன்
எரிச்சுடரே கண்ணுறங்கு
 ஆராரோ ஆரிராரோ
தேவி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.