மழையெல்லோரெம்பாவாய் - தேவஅபிரா

Photo by Waldemar Brandt on Unsplash

இங்கு பொழிகிறது மழை !
அங்கென் மண்ணிலும் பெய்யுமோ? !
கையேந்தா மனிதரின் கனவுகள் !
உலர்ந்த காலத்தின் மீதும் பெய்யுமோ? !
மழையின்றி நிமிராவெப்பயி£¤லும் பெய்யுமோ? !
வேரறுந்து விலகிய மனிதரின் விளைநிலம் !
சுவடிழந்து அழுகிறது. !
தேரசைந்த திருக்கோவில் கனவுகளை !
பாழடைந்த கோபுரம் பாடும் பாடலை !
பாடும் கிழவனின் கைத்தடியும் !
வழுவி நனையுமோ? !
ஊர் முடிந்த வெளியில் !
பொன்னிற மாலையில் !
மஞ்சள் குளிக்கும் !
என் தனியொரு வீடும் வேம்பும் நனையுமோ? !
ஏக்கம் மீதுற விண்ணின் துளிகள் !
பின்னிப் பெருமழையெனப் பொழிய !
என் பெண்ணின் விழிகளை மருவி !
இதழ்களைத் தழுவும் !
கனவில் இலயிக்கும் !
சாளரக் கரையின் சயனத்துடலில் !
படுமோ தூவானம்? !
மூசிப் பெய்தும் !
முழுநிலமும் கரையவோடியும் !
பின்னும் பெயரின்றி !
ஆழக்கடலில் கலந்து அழியும் மழையே !
தேடிப் பெய் என் தேசத்தை. !
ஏங்கித் தளர்ந்து இனிப்புகலே இல்லை !
எனத்தளம்பும் மனிதரை !
நெடுமரமடியின் நனையாக் குடிலில் இருத்திப் பின் பெய். !
இம்மழை மண்ணில் பெய்தது !
மரத்தில் பெய்தது !
மனதிலும் பெய்தது !
என்றுனக்கு அழியாப்புகழ் தருவேன். !
கார்த்திகை - 1996 !
தேவஅபிரா puvanendran@home.nl !
***** !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன
தேவஅபிரா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.