தமிழமுதம் - s.உமா

Photo by FLY:D on Unsplash

கடலோடு காற்று!
தோன்றியப் போது!
அக் காற்றோடு கலந்தது!
எங்கள் மூச்சு!
தமிழ் பேச்சு...!
கல் கொண்டு மக்கள்!
உரசியப் போது!
காதல் கொண்டு!
கவிதை பேசியது!
எங்கள் குடி...!
தமிழ் குடி...!
காடும் மலையும்!
அலையும் கடலும்!
வாயலோர் வாழ்வும்!
முதற் கொண்டு!
கவிதை யாத்தனர்!
எம் குடி மூத்தவர்...!
பாலையும் கொண்டதிப்பெருமை!
பழைமை வாழ்வுக்கோர்!
பறைசாற்றும் உரிமை...!
எம்மில்,!
வீரம் கொண்டு!
வாள் பேசிய!
வெற்றி வேந்தர்!
பலருண்டு..!
கல் கொண்டு!
காலனை வென்ற!
காளையரும்!
இங்குண்டு!
கடைக் கண் பார்வையால்!
காதலை வென்று!
கடிமணம் கொண்ட!
கற்புடை பெண்டீர்!
பொற்புடன் நடத்திய!
பாங்கு, எம்!
குடும்ப வாழ்விற்க்கோர்!
பெரும் சான்று..!
பண்புடை நெஞ்சினர்!
பரத்தையராயினும்!
இவர் பயின்ற கலைகளாயிரம்!
இவர் பற்றிய பாக்கள்!
பல்லாயிரம்...!
இவையணைத்தும்!
எம் பாட்டன் சொத்து...!
-S.உமா
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.