தாலாட்டு - s.உமா

Photo by Jr Korpa on Unsplash

பட்டுத் துகிலெடுத்து!
தொட்டிலொன்று கட்டிவைத்தேன் !
கட்டிக் கனியமுதே!
கண்ணுரங்க வாராயோ!!
!
மலர்மேனி நான்அணைத்து!
மடிமீது வைத்திருந்து!
தட்டித் தூங்க வைப்பேன்!
தளிர்க் கொடியே தூங்காயோ!!
!
வண்ணத்து பூச்சியினம்!
வட்டமிட்டே தாவி வரும்!
பொன்மேனி தனைக் கண்டு !
பூ வெனவே மயங்கிவிடும்..!
!
கண்ணத்து கதுப்பெடுத்து!
கொத்தவரும் கிளிக்கூட்டம்!
விண்ணத்து மீன்களெல்லாம்!
விளையாடத் தேடிவரும்!
!
பாட்டெடுத்து பாடிடுவேன்!
பக்கத்தில் துணையிருப்பேன்!
இளங்காலைச் சூரியனே !
எட்டி நீ பார்க்காதே..!
!
படித்து பட்டம்பெற!
பாடுபடும் அண்ணனங்கே!
பிரித்த பக்கமெல்லாம்!
பேசா உன் சித்திரங்கள்!
கண்டு சினங் கொண்டு!
உன் எதிர் வந்து நின்ற்வனை!
சின்ன இதழ்விரித்து!
சிரித்து வலை வீசிவிட்டாய் !
தொட்டு உனை தூக்கவைத்தாய்!
துள்ளி விளையாடவைத்தாய்!
பாடமெல்லாம் போகட்டும் உன்!
பட்டு மேனி துவளாதோ?!
!
சிட்டாய் நீ ஓடிவந்து!
சீக்கிரமே தூங்கிவிடு!
காத்திருக்கு எதிர்காலம்!
கண்ணுரங்க நேரமில்லை..!
!
கலைகள் பல கற்றிடனும்!
கடமை யெல்லாம் செய்திடனும்!
பெரிய பெயர் பெற்றிடனும்!
புகழ்வானில் பறந்திடனும்..!
!
அன்புக் கொண்டு பிறரிடத்தில்!
அற்புதமாய் வாழ்ந்திடனும்!
தாய்தேசம் தழைக்கவைக்க!
தன்னலமே மறந்திடனும்.. !
!
மயக்கவரும் மாலையிலே!
மான்விழியாள் கண்டுவிட்டால்!
விழித்திருக்க வேண்டிவரும்!
விண்ணுலகம் இறங்கிவரும்..!
!
இப்போதே தூங்கிவிடு!
இருவிழிக்கு ஓய்வுகொடு!
எப்போதும் காத்திடுவான்!
எம்பெருமான் துனையிருப்பான்
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.