பொய்யாமை.. உழவின்றி உய்யா - s.உமா

Photo by Paweł Czerwiński on Unsplash

[து] உலகு!
!
01.!
பொய்யாமை!
-------------------!
பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்!
வஞ்சத்தால் வாய்மை யிழந்தான் பெரும்புகழ்!
அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை!
நெஞ்சத்தான் செய்த வினை.!
குறள் வடிவில்!
நெருப்பிட்ட பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்!
பொய்யிட்டுச் சேர்த்தான் புகழ்.!
பழிக்கும் செயலான் பெரும்புகழ் காலம்!
அழிக்கும் விழலாய் விரைந்து.!
!
02.!
உழவின்றி உய்யா[து] உலகு!
------------------------------------!
கருவிகலை செய்தொழில் யாவும் புகழ்தரலாம்!
மாந்தர் உறுபசி தீர்க்க உடல்வளைத்தே!
ஏழை விதைத்தநெல் போலாமோ ஏற்பீர்!
உழவின்றி உய்யா துலகு!
ஈகலப்பை கொண்டு எழுதியே வந்தாலும்!
ஏர்கலப்பை இல்லா தியலுமோ மண்ணில்!
பசித்தவுயிர் 'பா'எழுது மோபசி தீர்க்கும்!
உழவின்றி உய்யா துலகு
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.