மொட்டை மாடி புல் - s.உமா

Photo by Sajad Nori on Unsplash

எல்லையில்லா காட்டை யழித்தே இங்கு!
கட்டிடங்கள் கட்டு கின்றார் அதன்மேல்!
புல்லைவளர்த் தேபோற்று கின்றார் பாழ்பசிக்கது!
பழம்தருமோ நிழல்தந் திடுமோ நிற்க!
மணம்தருபூக் கள்மலர்ந் திடுமோ மண்ணைக்!
காத்திடுமோ ஏழை ஒருவன் தாகம்!
தீராதிருக்கை யிலேநீர் தருமோ நெஞ்சில்!
ஈரமில்லா தொருவன் தினம்பத் துவாளி!
நீர்பாய்ச்சி வளர்த்து விட்டப் புதுப்பணக்!
காரன்வீட் டுமொட்டை மாடி வளர்புல்
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.