பழசின் புதுசு - ரவி (சுவிஸ்)

Photo by FLY:D on Unsplash

தீயின் செந்நாக்கை நான் !
தூசித்துத் துரத்திய நாட்களின் மீது !
கடத்திவரப்பட்டேன். !
இருபத்தியிரண்டு ஆண்டுகள் !
புத்தகங்களின் சாம்பலால் !
தூசிப்படுத்தப்பட்டதாய் எம் அறிஞர்களும் !
அலுக்காது சொல்லிக்கொண்டிருந்தனர். !
எரிபாடுகளின் குவியலில் எஞ்சிய !
நூல்களும் களவாடப்பட்டிருந்தன. !
யாழின் !
நூல்நிலைய எரிசிதைவுகளை !
தீ விட்டுச்சென்றது - !
வரலாற்றின் பதிவுக்காய். !
அதுவும் இப்போ அழிக்கப்பட்டாயிற்று. !
அதன் சுவடுகளை சுத்தப்படுத்தி மீண்டும் !
எழுந்தது நூல்நிலையம் -பழசின் புதுசாய். !
வெள்ளைநிறப் பூச்சின் பின்னால் !
பேதங்கள் மறைக்கப்பட்ட சங்கதியில் !
ஒழுக்கு விழுந்தது. !
விடுதலைத் தீயில் சாதிவெறி வதங்கியதான !
ஒரு மாயைப் பொழுதில் !
அவர்கள் வந்து காவலாளியிடம் !
திறப்பைப் பறித்துச் சென்றனர். !
பிறகொருநாள் !
பூட்டிய தனி அறைக்குள் !
’சுமுகமாய்’ !
பேச்சுவார்த்தை நடத்தினர் -வாயில் !
ஆயுதவெடில் நாற. !
புதிய நு£லகத் திறப்பில் !
சாதிக் கறல் படிந்தது. !
நூலக வரலாற்றின் பதிவில் !
செல்லன் கந்தையன் என்ற பெயர் !
தீண்டத்தகாததாயிற்று. !
எழுத்தறிவிப்போர் சாதியை எழுதி !
அறிவைக் கற்பிக்க !
ஊர்வலம் வந்தனர். !
’’நூலகத்தைத் திறவாதே!’’ !
இதைவிட வெட்கம் எதுவென நகைத்தது !
முன்னவன் இட்ட தீ !
மெழுகுதி£¤யையும் பெரும்தீ நகைத்தது - !
யுத்த இரவுகளில் !
படித்தலின் இறுதிமூச்சை நீ ஏந்தியதாய் !
பெருமைப்பட்டதைப் பார் என்று. !
தீமூட்டும் வேலை இனி !
தேவையில்லை என்பதாய், அது தன் !
கொள்ளியை எம்மிடமே !
தந்துவிட்டுப் போயிருக்கிறது. !
- ரவி (சுவிஸ்) 110503 !
குறிப்பு :: !
செல்லன் கந்தையன் - தலித், 16.01.2002 இலிருந்து யாழ் மேயராகச் செயற்பட்டார். !
நன்றி: எக்ஸில்
ரவி (சுவிஸ்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.