பூக்களைப் புறக்கணிக்காதீர்கள் - ராமலக்ஷ்மி

Photo by Tengyart on Unsplash

பெற்றவள் விற்றா விட்டாள்!
சொல்கிறார்கள் குற்றமாய்!
ஆயினும் எவருக்கும்!
தெரியவில்லை சரியாய்!
தொற்றிக் கொள்ளத்!
தோள் தேடிக் கிளியே!
கேள்விக் குறியாக நீ!!
!
கத்தை கத்தையாய் கண்ணே!
நோட்டுக்களைக் கைமாற்றி!
நோகாமல் உனைக் கையாளத்!
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட!
தோள்கள் துவண்டு போய்!
தொங்கி விழும் தலையுடன்!
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!!
!
தயக்கமே இல்லாமல்!
தடயங்களை மறைத்துத்!
தகவல்களையும் இடம் மாற்றி!
தடுமாற்றமே இல்லாமல்!
தந்திரமாய் விலை பேசும்!
தரகர் கும்பல் இவர்கைகளிலே!
தத்தளித்திடும் தளிரே - உண்மையிலே!
'தத்து' அளித்திடத்தான்!
தரப் பட்டாயா நீ ?!
!
கலி என்பது இதுதானோ!
கற்றவரும் துணையாமே!!
காலம் எங்கே செல்கிறதென!
கலக்கம் சூழுதிங்கே கலைமானே!
கவலை அறியாது நீ!!
!
கொடுமை கண்டு அடங்கவில்லை!
கொந்தளிப்பு இங்கெமக்கு!
சந்தையிலே விற்கின்ற!
கொத்தவரங்காயா நீ ?!
!
மருத்துவமனை வளாகத்திலேயே!
மனசாட்சியற்ற சிசு ஏலமாம்!
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்!
மருந்து மயக்கத்தில் நீ!!
!
காவலரால் மீட்கப் பட்டு!
கரை சேர்ந்ததாயென செய்தி!
ஊடகங்கள் உறுதி செய்ததும்தான்!
உறக்கம் வந்தது எமக்கு!
நிறைவாய் ஒரு!
வாக்கியம் உனக்கு!
இனியேனும் இனிதாய்!
வாழ்ந்திடுக நீ!!
!
குற்ற உணர்வென்பது!
கொஞசமும் இன்றிக்!
குப்பைத் தொட்டியிலும்!
இடுகாட்டு வாசலிலும் கூட!
இட்டுச் செல்கிறாராமே உனைப்!
போன்றப் பல பூஞ்சிட்டுக்களை!
விடிகின்ற காலையோடு!
விடிந்து விடும் உம்வாழ்வுமென!
விட்டிடலாம் கவலைதனை!
எவரேனும் கண்டெடுத்துக்!
கரை சேர்ப்பாரென-!
இரை தேடி இரவெல்லாம்!
சுற்றி வரும் நாய்களிடம்!
மாட்டி மடிய நேர்ந்தால்!
என்னவாகும் எனும்!
பின்விளைவுகளைப் பற்றிய!
சிந்தனை சிறிதுமின்றி...!!
!
எட்டி யோசிக்கட்டும்!
பூக்கள் உம்மைப்!
புறக்கணிக்கும் செடிகள்.!
!
ஆம் சில செடிகளுக்கு!
பல கொடிகளுக்கு!
பூக்களுடனான பந்தம்!
தொடர்ந்திடக் கொடுத்து!
வைப்பதில்லைதான்.!
!
வறுமை முதல் வெறுமைவரை!
வெவ்வேறு காரணங்களால்!
அடித்து வீசும் காற்றாகவும்!
சுழன்று வீசும் புயலாகவும்!
வாழ்க்கையை விளையாடிவிட்ட!
விதியின் சதியினால்!
துளிர்க்கின்ற தளிர்களைத்!
தம்மோடு வைத்துக்!
கொள்ள வழியற்ற-!
அச்செடிகொடிகள்!
அரசுத் தொட்டிலிலோ!
ஆதரவற்றோர் இல்லத்திலோ!
உம்மை உதிர்த்துச் சென்றால்-!
தத்தெடுக்கக் காத்திருப்போர் வசம்!
சட்டப்படி ஒப்படைக்கப்பட்டு!
வாழ்வாங்கு வாழ்ந்திடத்தான்!
வழிவகை பிறந்திடுமே
ராமலக்ஷ்மி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.