கைவிடப்பட்ட மந்தைகளும் - பிடுங்கி

Photo by Julian Wirth on Unsplash

கரணம் போடும் மேய்ப்பர்களும்.... !
--------------------------------------------------------------------------------!
கோடைஇடியிடித்து!
வானம் மின்னியது.!
பூமி நடுங்கியது.!
கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!!!
நரிகள் பிலாக்கணமிட்டழுதன!!
மந்தைக் கூட்டம் சிதறியது.......!
எது திசை??? எது போகுமிடம்???!
தெரியாது திகைத்தன மந்தைகள்.!
மேய்ப்பர்களின் கையசைவிற்காய்!
ஏங்கித் தவித்தன அவை. !
மேய்ப்பர்களைக் காணவில்லை!
கைவிட மாட்டார்கள்.!
நம்பிக்கையோடு,!
மேய்ப்பர்களைத்தேடத்!
தொடங்கின!
மந்தைகள்!!! !
வனாந்தரங்களில்.....!
கட்டாந்தரைகளில்....!
முகாம்களில்....!
காடுகளில்.....!
சுடலை வெளிகளில்.....!
தெருவோரங்களில்......!
எங்கு மேய்ப்பர்கள்???,எங்கு மேய்ப்பர்கள்??? !
தேடித் தேடியே!
மந்தைகள்!
வாழ்விழந்தன.!
எல்லை புகுந்தவை!
வக்கிர புத்திக்காரரின்!
வக்கிரத்துக்குப் பலியாகிப் போயின. !
பாளும் உயிரைக் கையில் பிடித்து!
பசிவயிற்றோடு!
நாலு கடலிலும் அலைந்து திரிந்தவற்றை!
சிறுகச் சிறுக!
கடல் தின்று தீர்த்தது. !
தப்பித்து நீந்தியவைகள்!
மாற்று நாட்டு அகதிகள் ஆகின. !
இறுதியாய் வானைப் பிளந்து!
மந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்!
புதிய புதிய!
மேய்ப்பர்கள் நாலாபுறமும் ......!
நானே மீட்பர், நானே மீட்பர்,என!
காதுசெவிடுபடக் கூவிச் செபித்தனர். !
வானத்திலிருந்து உங்கள் மேல் இறங்கிவரும்!
புதிய மேய்ப்பர்களாகிய நாங்கள் புதிய உபாகமத்தை!
உங்களுக்காய் உபதேசிக்கின்றோம். !
உம்மைத் துரத்திய தேசத்தை நாமோ ,!
புழுதியும் மண்ணுமாக்குவோம்.!
அதை விட்டு உங்களை விலக்கிய!
படியால்!
அவர்கள் அழியவென நாங்கள் சபிக்கின்றோம். !
பூமியிலுள்ள!
எல்லா ராஜ்யங்களிலும்!
சிதறுண்டு போன எம் மந்தைகளே!!!!
எங்களை ஆதரித்து ஆலிங்கனம் செய்வதால்!
உங்களை வெல்வீர் - இன்றேல்!
உங்கள் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும்!
பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.!
அவைகளை விரட்டு வாரில்லாதோராய் நீங்கள்!
துயரப்படுவீர்கள். !
உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும்!
அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.!
அவர்கள் உங்களோடு கூட இராமல்!
டிஸ்கோக்களிலும், மதுபானச்சாலைகளிலும் படுத்துறங்குவார்கள்..!
மொழியை அழித்து முகத்தை இழக்கப்போகிற!
அவர்களைச் சிறைப்படச் செய்வோம். !
உங்கள் நிலத்தின் கனியையும்,!
உங்கள் பிரயாசத்தின் பலனையும்!
நீங்கள் அறியாத ஜனங்கள் புசிக்கும் படிக்கு!
நாங்கள் சபிப்போம். !
தப்பிய மந்தைகள் தடுமாறி நடுங்கின!!!!
எங்கள் மேய்ப்பர்கள்.......!
நல்லவர்களா??!
கெட்டவர்களா ??!
விடையறியாது தவித்தன!
தப்பிய மந்தைகள்
பிடுங்கி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.