தாயின் பாசம் - பாரத்

Photo by Jan Huber on Unsplash

கவிஆக்கம்: பாரத் !
புலிக்கண்மயிலே !
புளியமரத்தின் ஓரத்திலே !
ஓலை குடிசையிலே !
வற்றகுழம்பு வாசம் வீசயிலே !
சாணமிட்ட தரையினிலே !
தாயின் மடியினிலே !
தலைசாய்த்து படுக்கையிலே !
உறங்கிய நேரம் தெரியவில்லை !
சுகமாய் எழுந்தேன் காலையிலே !
சிங்கை சென்றேன் அன்று மாலையிலே !
பஞ்சு மெத்தையிலே !
படுத்து புரலுகையிலே !
தூக்கம் வரவேயில்லை !
நாகரீக உணவினிலே !
நாக்கு செத்துப் போனதடி தாயே !
அன்று நீ !
அன்பால் பரிமாறிய வற்றகுழம்பு !
வாசமிங்கே வீசுதடி... !
!
கவிஆக்கம்: பாரத் !
006581544486
பாரத்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.