இன்னமும் பசுமையாய் உள்ளத்தில் - நிர்வாணி

Photo by Tengyart on Unsplash

கருக்கலில் கந்தர் வண்டிகட்டி!
கொடிகாமச் சந்தை சென்று!
தேங்காய் வாங்கி வந்து!
கூவி விற்றதுவும்!
கருமைப் பசுவை காரிருளில்!
அத்தளு வயல்வெளியில் தேடியலைந்ததுவும்!
எல்லை அடி கூடியதால்!
வாய் சண்டை கிளுவங்கதியால் ஏறி!
ஆளுக்காள் முட்டி மோதியதுவும்!
ஐ£திகள் இல்லையென்று!
மேடை மேடையாய் பாரதி கவிதை சொல்லி!
கிறுக்கனென்று எம் மக்கள்!
முத்திரையிட்டதுவும்!
ஆண்டுகள் ஓடி!
வயதுகள் கூடி!
கூனிக் குறுகிப் போனாலும் கூட!
இன்னமும் பசுமையாய் உள்ளத்தில்
நிர்வாணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.