அப்பா ஏன் கொல்லப்பட்டார்? - நிர்வாணி

Photo by Maria Lupan on Unsplash

ஈழப்போரின் ஆரம்பம்!
இனத்தை இனமே கொல்வதில்!
பலமும் வீரமும் பறைசாற்றப்பட்டது!
இப்படித்தான்!
நள்ளிரா வேளையில்!
ஊரோடு நானும் கூடிநின்று!
வேடிக்கை பார்க்க!
தாயும் சகோதரியும் கதறக் கதற!
எங்களின் உலகம் இழுத்துச்செல்லப்பட்டது!
எங்களோடு மழையும் !
மண்ணில் விழுந்து புரண்டு புரண்டு அழுதது!
விடிந்தது!
விடிவற்ற இரவுகளாய் மாறியது வாழ்க்கை!
மீண்டும் ஊர் கூடியது!
வேடிக்கை பார்த்தது!
சடங்கு முடித்து !
எரித்துச் சாம்பலாக்கி கடலில் கரைத்தோம்!
மீண்டும் மீண்டும் நிறைய அப்பாக்கள்!
கொல்லப்பட்டார்கள்!
'துரோகிகள் ஆக்கப்பட்டார்கள்!
யாரும் கேள்வி கேட்கவில்லை!
நான் உட்பட!
இன்று!
துப்பாக்கிகள் மௌனமாகிவிட்டன!
கொலையாளிகள் காணாமற்போயினர்!
அப்பா ஏன் கொல்ப்பட்டார்!
யார் கொன்றார்கள்!
கேள்விகள் தரும் வலியோடு!
நகர்கிறது வாழ்க்கை!
!
26-மாசி-2011
நிர்வாணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.