பூனைகள் - நீதீ

Photo by FLY:D on Unsplash

நினைப்பெல்லாம்!
உயர்ந்து விட்டதாக!
தலைகால் புரியதா!
கடுவன் பூனைகள்!
புதிதாய் வரும் பூனைகளை!
எலியாய் நினைத்து!
ஏப்பம் விடுகிறது!
கடுவன் பூனைகள்!
பக்கத்தில் வரும் போதெல்லாம்!
உறுமிச்செல்கின்றன!
பயமறியா பூனைகள்!
பக்குவப்பட்டதாலே!
கண்களை மூடிச்செல்கின்றன!
திரும்பிப் பார்க்க !
திராணியற்ற கடுவன் பூனை!
பூனையை சுரண்டியே!
பிரபஞ்சத்தில் மினுமினுக்கிறது!
பூனைகளின் வளர்ச்சிக்கு !
கடுவன் காரணமாம்!
சந்திக்கும் இடங்களிலே!
சல்லாபப் பேச்சுக்கள்!
சப்தங்களாக தொடர்கின்றன!
பூனைகளுக்கும் புரியும்!
நித்திக்கப்பட்ட நிர்பந்தத்தாலே!
சாதுவாக ஓடுகிறது!
!
கவிதை: நீ “ தீ”
நீதீ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.