நானும் எனது குடும்பமும் - நெடுந்தீவு முகிலன்

Photo by Tengyart on Unsplash

வருகிற....!
புது வருடத்தை முன்னிட்டு!
நானும் மனைவியும் குழந்தைகளுமாக!
ஒவ் ஒரு புடவைக்கடைகளாய்!
ஏறி இறங்கினோம்.!
எத்தனை கடைகள் என்று........!
அன்னளவாக இப்போது – எனக்கு!
ஞாபகம் இல்லை....!
மூத்தவள் - கலர்!
பிடிக்கவில்லை என்று.............!
முணுமுணுத்தாள்.!
இளையவள் - இது!
மொடலிங் இல்லை என்று .........!
மூஞ்சியை திருப்பி!
உம்முண்ணு இருந்தாள்.!
அடுத்தது – அக்காட!
மாதிரியே எனக்கும் என்று..........!
அழுதழுது அடம்பிடித்தது!
.கடைசி என் கையைபிடித்து!
அடிக்கடி இழுத்தது –அடுத்த!
கடைக்கு போவோம் என்று.....!
எல்லோரையும் விட – மனைவி!
அலுப்பு கொடுத்தாள்.!
அது பிடிக்கிதா......?...இது பிடிக்கிதா.........?..!
என்று ...கேள்விகளை எழுப்பி!
ஏதோ எல்லோருக்கும் ஒவ்வொன்று!
வாங்கிக்கொண்டு - வீடு திரும்புகையில்!
இரவாகிவிட்டது.!
காலையில் யாரோ ....ஒருவனின்!
அம்மா வருகிற!
வயதாகிப்போன அம்மா தானோ என்று ....!
நான் வாங்காமல் விட்டு வந்த – அந்த!
வண்ண பட்டு புடவையைக் கட்டிக்கொண்டு
நெடுந்தீவு முகிலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.