சங்கப் பாடம் - நா.முத்து நிலவன்

Photo by Jan Huber on Unsplash

தி.மு.க.தலைவருக்காகப் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
ம.தி.மு.க.தலைவருக்காகப் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
மார்க்சிஸ்ட் வாலிபர்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
போக்குவரத்துத் தொழிலாளர்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
பொதுத்துறை ஊழியர்கள் ஊழியர்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
தொழிலாளிகள் போராடினார்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
விவசாயிகள் போராடினார்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
இப்போது நான் போராடுகிறேன், !
எனக்காகக் குரல்கொடுக்க !
யாருமே இல்லை. !
(உலகத் தொழிற்சங்கக் கவிதையை !
உள்நாட்டில் தழுவியது) !
- நா.முத்து நிலவன்
நா.முத்து நிலவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.