நண்பர்கள் தினம் - முத்து கருப்புசாமி

Photo by Aleksandar Živković on Unsplash

ஒவ்வொரு தேசிய கீதத்தின்
கடைசி வரியிலும்
நிகழுமே அது!

ஒவ்வொரு முகூர்த்த நேரத்தின்
கடைசி நிமிடத்திலும்
நிகழுமே அது!

ஒவ்வொரு வருடப் பிறப்பின்
முதல் வாழ்த்திலும்
நிகழுமே அது!

தோட்டத்துப் பூச்செடியில் மலர்ந்த
முதல் பூவிலும்
நிகழுமே அது!

பெற்ற குழந்தை உச்சரித்த
முதல் வார்த்தையிலும்
நிகழுமே அது!

என...

அத்தனை உணர்வுகளையும் கூட்டி
உன் ஒரு முத்தில் காண்கிறேன்
அனுதினமும்!

இனி,

நமக்கெதற்கு நண்பர்கள் தினம்!
அது நம் கடலில்
விழுந்த ஒரு துளி
முத்து கருப்புசாமி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.