நம்பிக்கையை - முல்லை அமுதன்

Photo by Chris Barbalis on Unsplash

நம்பிக்கையை !
தான் கைப்பிடித்து !
நடக்கிறேன்.!
அவர் பற்றி!
இவர்களும் அவர்களும்!
நடத்தும் பட்டிமன்றம் முடியவே இல்லை..!
தொடக்கத்தில்!
இருந்தே அவர் மீதான!
அன்பு!
நம்பிக்கையாக வளர்ந்தது..!
அவர் கை நீட்டி அழைத்ததில்லை...!
நானும் அவரிடம் நெருங்கியதில்லை.!
ஆனாலும்!
நம்பிக்கை வேர்கள் !
ஆழமாய் ஊடுருவி இருக்கிறது.!
என்னை அவ்ர் தேடியிருக்க வாய்ப்பில்லை..!
ஆனால் !
அவரை தேடியிருக்கிறேன்..!
நெருங்கமுடியாதவர் எனினும்..!
என்னுள் நெருங்கியே இருந்திருக்கிறார்!
என்பதை!
இப்போது உணர்கிறேன்..!
நம்பிக்கை வேர்களை அறுந்தெறிந்துவிட!
தயாராக இல்லை...!
வேண்டுமென்றால் உன் சேதியை!
சொல்லிவிட்டு!
சொல்லிவிட்டுப் போய்விடு..!
அவரின் வருகை பார்த்து..!
சன்னல் திறந்திருக்கிறது.!
வேர்கள் இன்னும் இன்னும் !
ஆழ்மாகவே வேர் விட்டு நிற்கிறது...!
நச்சுப்புகையை வீசிவிட்டுப்போகும் -!
நீ!
நினைத்துக்கொன்டிருக்கிறாய்..!
போடா போ..!
நஞ்சு புகமுடியாத ஆழத்தில்!
நம்பிக்கை கட்டி எழுப்பட்டுள்ளது
முல்லை அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.