எப்போது என் கோபத்தைக் காட்டுவது? - முல்லை அமுதன்

Photo by Sonika Agarwal on Unsplash

போராடச் சொல்லி!
அம்மாவால் !
சொல்லித் தர முடியவில்லை.!
அரசியல் சொன்ன அப்பாவால்!
அக் !
கதைகளுக்குள்ளேயே!
முடங்கிப்போனார்.!
காவல் நிலையத்தில்!
களங்கப்பட்ட!
அக்காளை!
மௌனமாக இரு என்!
வெந்நீரில்!
குளிக்கவைத்து!
பாடசாலைக்கு !
மீண்டும் அனுப்பினாள்.!
கிட்டிபுல் விளையாடப் போன!
தம்பியின் வருகை!
இன்னும் தாமதமாகியே போனது.!
அண்ணன் !
இன்னும் காணாமல் போனோர் !
பட்டியலில் தான்..!
தருமன் தேர்தலில் வென்றான்!
கைதட்டி மகிழ்ந்தோம்.!
தர்மம் !
தோற்றதை !
மறந்து போய் நிற்கிறோம்.!
முன் !
வீட்டுச் சிறுவன் !
அவர்களுக்கு!
கல்லெறிந்து கோபத்தை வெளிக்காட்டுகையில் கூட!
அம்மா!
வீட்டுக்குள் எம்மை!
அடைத்து வைத்தாள்.!
எதுவும் வேண்டாம் !
சும்மா இரு என்று சொன்னாள்.!
ஆயின்!
கோபம் வருகையில்!
எப்போது என் கோபத்தைக் காட்டுவது?!
கல் !
முற்றத்தில்!
தூங்கிக் கிடந்தது!
எனக்காக
முல்லை அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.