இலக்கணம்.. விடியல் காணாத விழிகள் - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Photo by FLY:D on Unsplash

இலக்கணம் சமைக்கலாம்.. விடியல் காணாத விழிகள்!
01.!
இலக்கணம் சமைக்கலாம்!
--------------------------------!
முதலில்!
எச்சில் கையால்!
காக்காய் விரட்டும் !
பழக்கத்தை நிறுத்திவிடு.!
கஞ்சத்தனம் பற்றிய!
பாடத்தை பொருள் !
செலவில்லாமல் !
படித்துவிடு!
கடன் வாங்கி!
காலம் நீட்டி!
தவணை முறையில்!
கொடுக்கும் பழக்கம் !
வளர்த்துக்கொள்!
கடன் கேட்பவனுக்கு!
இருந்தாலும் இல்லை !
என்று கூற !
மனசாட்சியை மூடி வை!
உனது வேலைக்காரர்களை!
நாய்போல் நடத்த !
பயிற்சி எடு.!
அவர்களுக்கும் குடும்பம் !
இருக்கும் என்பதை!
அடியோடு மறந்து விடு!
எத்தனைக்கு !
குறைக்க முடியுமோ!
அத்தனைக்கு !
அவர்களுக்கான !
சலுகைகளை குறை.!
சம்பள பாக்கி வை!
விடுமுறை நாட்கள் !
என்பதும் வேலைக்காரர்களின்!
வேலை நாட்கள் என்று !
சட்டம் செய்!
சுதந்திரமாய் நடக்கும்!
நவீன அடிமைகள்!
என்று அவர்களுக்கு!
ஒரு முத்திரை குத்து.!
என்னதான் லாபம் !
வந்தாலும் நிறுவனம்!
நஷ்டத்தில் இயங்குவதாய் !
புலம்பிக்கொண்டிரு .!
வாடிக்கையாளர்கள் !
திருப்தியுறும் வகையில் !
ஏமாற்று.!
நண்பர்கள் குறை!
நா கூசாமல் பொய் பேசு.!
கள்ளக் கணக்கு எழுது !
பிச்சைக்காரர்களை !
வெள்ளிகிழமை மட்டும் !
வரச்சொல் !
பேருக்காக!
அவ்வப்போது கொஞ்சம் !
பொதுப் பணிகளில்!
தலை காட்டு.!
சொற்ப நிதியுதவி !
செய்துவிட்டு அதிகம்!
விளம்பரம் தேடிக்கொள்!
வரவில் மட்டும் கண்ணாயிரு !
செலவை கண்டு !
எரிச்சல் படு.!
மொத்தத்தில்!
ஒரு நல்ல!
சுயநலவாதியாயிறு!
அப்போதுதான் நீ ஒரு !
நல்ல முதலாளி !
என்பதற்கான !
இலக்கணம் சமைக்கலாம்!
02.!
விடியல் காணாத விழிகள்!
------------------------------------!
எங்கள் நிலவின் !
வண்ணம் கறுப்பு!
எங்களுக்கான வானவில் !
தோன்றும் காலம்!
அமாவாசை இருட்டு !
சாணக்குழியில்!
வீழ்ந்ததனால் கண்களை!
மூடிக்கொண்டன !
எங்கள் நட்சத்திரங்கள்!
அடை மழையிலும் !
கொடும புயலிலும் !
அகதியாய் போனது !
எங்கள் வசந்த காலம்.!
சூரியனை தேடித்தேடி!
காணாமல் போனது !
எங்கள் கிழக்கு!
பசி புசித்து கைகளால்!
மானம் மறைத்து !
உயிரைப் பிடித்துக்!
கொண்டிருக்கின்றோம் !
கோடைகளில் உலர்ந்து!
சருகாக முன் ஓர் மண்!
வீடு கட்டி குடிபுகுந்தோம்!
கிரகபிரவேசத்துக்கு !
வந்தெங்கள் சின்ன!
சந்தோசங்களில் பங்கெடுத்து !
ஆனந்த தாண்டவம்!
ஆடிப்போனது பூகம்பம்!
என்றாலும் துயரங்களின் !
கரையை தாண்டிவிட !
படகொன்று செய்தோம்!
அதற்குள் நதியே !
வற்றிப்போக !
திசைகள் இழந்த !
அடர்ந்த காட்டில்!
தொடங்கப்படாமலேயே !
முடிந்து போனது !
எண்களின் பயணம் !
ஆனாலும் ஆந்தைகளிடம்!
கண்கள் வாங்கி!
அயராது விடியலை !
உற்று நோக்கினோம்!
ஒரு நாள் விடியலும் வந்தது!
என்னசெய்ய ..!
ஆந்தையின் கண்கலாதலால்!
விடியலை தரிசிக்கும் !
யோகம பகலில்!
எங்களுக்குத்தான் !
இல்லாமல் போனது
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.