மார்ச்சாய்ந்து கிடக்கையிலே - கதிரவன்

Photo by Jr Korpa on Unsplash

நீ
என் மார்ச்சாய்ந்து விழி மூடி மூச்சிழுத்து கிடக்கையிலே ..
மதுவின் கதவில் மகிழ்ச்சியை பூட்டி
பின்பு
அதுவாகி ,
இதுவாகி,
எதுவாகி என மனதோடு முட்டி ..
கிணற்றில் ஊறிய வாளியை போலவே
வான் நோக்கி நிற்கிறேன்
உன் அதாதி காதலின் ஆழத்தில்...
நெஞ்சோடு அணைத்த இன்பத்தினை முற்றிலுமாய்
கூற முடியா
இக்கவிதையோ நீட்சியாய் ..
கதிரவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.