பூக்குங்காலம் - கருணாகரன்

Photo by Tengyart on Unsplash

நான் நானாக இருப்பதிலும் !
நீ நீயாக இருப்பதிலும் !
ஏன் நம்மிடையே ஓயாத பிணக்கு? !
உன்னை என்னுள் திணிப்பதையும் !
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன். !
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும் !
என் பாடல்களை நானே இசைப்பதிலும் !
ஆனந்த முண்டல்லவா? !
உனது கனவுகளை நீயே வரைந்துகொள் !
எனது வண்ணங்களை நானே குழைக்கின்றேன் !
காலம் ஒரு பதிய பூவாய் மலரட்டும் !
வானத்தில் அதன் மலர்ச்சி ததும்பட்டும். !
-கருணாகரன் !
நன்றி: !
’ஒரு பொழுதுக்காகக் காத்திருத்தல்’ !
மகிழ் வெளியீடு (ஈழம்)
கருணாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.