சிரிக்கும் பறவை - கருணாகரன்

Photo by Pat Whelen on Unsplash

இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்தால் !
இந்த அவசரத்துக்கு !
என்ன நடந்து விடப்போகிறது !
என்ன நடக்காமல் விடப்போகிறது? !
தயக்கமுறும் நிழல்கள் !
பின்னகர !
இருளின் வாசம் நம் மீது கவிகையில் !
அவிழும் நினைவுகளில் !
எது யாரிடம் !
எது யாரிடமுமில்லை? !
ஒருமித்த ஞாபகங்களை !
விலக்கும் கணங்கள் !
எதிரெதிர் முனைகளில் !
காந்த விசையைப் பெயர்த்தனவா? !
அறியேன் !
எறும்புகளின் வன்முறைகளில் !
உண்டா அடையாளமும் !
பிரகடனமும் !
அவற்றின் சினேசிகத்திற்கு !
இருக்கிறதா பாடலும் இசைக்குறிப்புகளும்? !
துக்கத்தின் வலியில் சிதறுண்ட !
எறும்புகளின் பாதையில் !
ஏதேனுமொரு ஞாபகத்துண்டைப் !
பார்த்தாயா? !
பறவைகளிலும் பூக்களிலும் !
உன்னைப் பகிர்ந்தளித்து விட்டுப் போனாய் கரைந்து !
யாசகனாய் நான். !
தவிர்க்க முடியாதவாறு !
நம் தனிமைக்குள் ஊடுருவி !
நெடும் பயணம் நிகழ்கின்றன !
உன் கண்கள் எடுத்து வந்த காட்சிகள். !
எந்த வாசலிலும் இல்லை !
யாருடைய வரவேற்பும் !
பனிவிலகத் துடித்தெழும் தெருவில் !
ஒரு பள்ளிச் சிறுமி !
நகர மறுத்த காலப் புள்ளியில் !
நின்று விளையாடுகிறாள் !
நீயும் விளையாடுகிறாயா !
கமெராவுடன் !
திகைத்து நின்று !
வழிமறிக்கும் நமதன்பு !
தத்தளிப்புடன். !
-கருணாகரன்
கருணாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.