எங்கும் நீ - கோவிந்தபிள்ளை, சிறீதர்

Photo by Tengyart on Unsplash

நினைவினில் நீயானாய்,!
கனவினில் நீயானாய்,!
உயரினுள் ஒன்றானாய் ,!
உறவினுள் இரண்டானாய்,!
உன் குரல் கேளாமல்!
என் உயிர் துடிக்காது,!
உன் மொழி கேளாமல்!
என் விழி மூடாது,!
மனதினில் சுமந்தேனே!
மறுப்பது சரிதானா?!
மயக்கத்திலும் என்னை!
மறுப்பது முறைதானா?!
கிறக்கத்தில் நான் இல்லை,!
உறக்கத்தில் நான் இல்லை,!
இறப்பது என்றாலும்!
நீயின்றி நானில்லை .!
தடுக்கின்ற சுவர் ஏது!
உடைகின்ற வழி கூறு!
அனைகின்ற நாள் பார்த்து!
அருகினில் உறவாடு!
நெருக்கத்தில் நெருப்பாவாய்!
நெஞ்சுக்குள் மழையாவாய்!
நெருங்காதபோதெல்லாம்!
நெருஞ்சியின் முள் ஆவாய்.!
வளைகொஞ்சும் கையாலே!
வளைத்திட மாட்டாயா?!
வலை பின்னும் விழியாலே!
வசமாக்கமாட்டயா ?!
மறுஜென்மம் என்றாலும்!
மறக்காமல் வரவேண்டும்!
மறுபடி பிறந்தாலும்!
மடிமீது நீ வேண்டும் .!
காலங்கள் போனாலும்!
மாயங்கள் ஆகாது!
கண்ணே உன் காதல்தான்!
கதையாகி போகாது!
காணலின் நீர் தானோ!
நான் கொண்ட ஆசைகள்!
கண்களின் நீர் தானோ!
நான் சேர்த்த ஆசைகள்
கோவிந்தபிள்ளை, சிறீதர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.