சட்டம் - கலைநிலா

Photo by Scott Webb on Unsplash

 
எழுத்தறிவு அறிய
எழுதும் கரும்பலகையில்
கூடா இருக்கிறது
சட்டம்...

வட்டம்,மாவட்டம்
என்று போகும்
அரசியல்வாதி  போடும்
திட்டத்திற்கு
சட்டம் சாயம்
போன நிலையில்...


தாதாக்களோ
சட்டத்தை வளைக்க
வாய்தாக்கள்
வாங்கும் நிலை...

சட்டம் சாமானியனுக்கு
சாபம்...
சகலமும் அறிந்தவனுக்கு
சட்டம் தன் கடமையை
செய்யும்...
 
கலைநிலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.