காலத்தின் தரிப்பிலே - கலைமகள் ஹிதாயா றிஸ்வி

Photo by Paweł Czerwiński on Unsplash

கரையான்களாய் அரிக்கும்!
மனசு .....!
பழுதுகலாக்கி விட்டு!
சங்கிலித் தொடர்களாய் -!
சந்தோஷம் கொண்டாடும் ..!!
ஆனாலும் -!
தூசுகளிடமிருந்தோ ....!
தூள்களிடமிருந்தோ ....!
எனக்கு -!
எந்த வியாதிகளும்!
தடவித் தரவில்லை அவை ...!!
பார்த்தாயா.....?!
எறும்புகளின் அந்த ஒற்றுமையை ..?!
கண்களில் பட்டதா ...?!
ஒன்றோடு ஒன்று சந்தித்து முத்தமிடுவது ....?!
மழை தூவுகிறது -!
பொந்துகளில் ...!!
அறிவு படைத்த மனிதன்!
யோசித்த வண்ணம் இருக்கிறான் ...!!
சாதி மத பேதங்களில் .....!
மானிடர் வாழ்வு!
போராடுகிறது ...!!
சொத்து சுகங்களில்!
உயிர் -!
பலியாகிறது ...!!
உறவுகளின் போராட்டத்தில்!
மனிதம் -!
அழிகின்றது ...!!
பகைவர்களின் எதிர்ப்புக்களில்!
உரிமை -!
இழக்கப்படுகிறது .....!!
தோழியின் மனம் ,!
ஏறும்புக் கூட்டங்களினூடே நகர்கிறது ...!!
இதயத்தின் ஏக்கங்களோடு,!
மனிதர்களின் செயல்களோடு -!
காலத்தின் தரிப்பிலே ......!!
மனிதர்களின் பகையிலே .....!
துயரத்தின் உணர்வுகள் ....!
உணர்வுகளின் தாக்கங்கள் ....!
இடிபோல!
முழங்கியெழும்....!!
பட்டாசு போல!
சிதறிப் போகும் ....!!
கலைமகள் ஹிதாயா றிஸ்வி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.