அற்புதத்தைக் காட்டு - கலைமகள் ஹிதாயா றிஸ்வி

Photo by frame harirak on Unsplash

மன சாட்சியே நீ யொருதரம் நல்லவனாய் மாறு !
கேவலமான செயல் தனை நன்மையாய் மாற்று !!
இப்புவியில் உன் பிறப்பின் தூய்மையைக் காட்டு .!
மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திப் பாரு !!
கன்னீயரை மிதித்து நிதம் மகிழ்வு கண்டு !
நேயமில்லா படுபாவி !உள்ளங் கொண்டு ,!
வாழுகின்ற காளையர் தம்மை !வாட்டு !
நொந்தழும் பெண்களுக்கு கருணை காட்டு !!
வெளிநாடுக்கு படித்தவரை அனுப்பி விட்டு .!
கொள்ளையருக்கு நாட்டில் இடமிட்டு !
உருமாறும் கொடுமைகளுக்கு அழிவை யூட்டு!
உலகெங்கும் இருளுக்கு ஒளியைக் கூட்டு !!
கண்ணீர்விட்டு கவலைப்பட்டு இந்த மண்ணில் !
வேதனைப் பட்டு வாழுகின்ற அப்பாவி மக்கள் !
நிம்மதி பெற்று உன்னாலே !ஆறுதல் பெற்று!
மகிழ்ச்சியாய் மூச்சிவிடவுன் அற்புதத்தைக் காட்டு !!
கலைமகள் ஹிதாயா றிஸ்வி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.