உயிர் மழை - கீதா ரங்கராஜன்

Photo by Paul Esch-Laurent on Unsplash

மழையே உன்னைத் தூமலர் தூவி வரவேற்கிறேன்!
உன் தூரலை இனிய சாரலை தூற்றுவோர் பலர்!
அவருக்கெல்லாம் உரக்கச் சொல்வேன் உன் பெருமையை!
உணரட்டும் அவர்கள் உன் அருமையை!
உன் நிர்மலத்தின் புனிதம் புரியாத பலர்!
உனக்கு களங்கம் கற்பிக்கின்றனர்!
மானிடர் செய்யும் பிழையிலே உன் பங்கென்ன!
பருவ காலத்தே பெய்யும் மழையை பொய்க்க!
அவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் என்னென்ன!
னிழல் தரும் தருவினை!
கனித் தரும் உயிரினை!
அழித்திடும் மனிதனே!
அமுதெனும் நீரினை!
அருளிடும் மழையினை!
பழித்திடும் உரிமையும்!
உனக்குண்டோ!
பயிர் செழிக்க பொழிகிறது மழை!
உயிர் அழிக்க விழைகிறான் மனிதன்!
குற்றமில்லாத மழையை குறை கூறும் மனிதனே!
சொல்கிறேன் கேள்!
கருப்பு குடை பிடித்து நீங்கள் தடுத்தாலும்!
சிகப்பு கம்பளம் விரித்து நான் அழைத்திடுவேன்!
உன்னை எங்கனமும் வரவேற்க!
அமிர்த வர்ஷினி பாடிக் கொன்டே இருப்பேன்!
விரைந்து வா!
-- கீதா ரங்கராஜன்
கீதா ரங்கராஜன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.