வெறுமையின் ஏக்கம் - கி.சார்லஸ்

Photo by FLY:D on Unsplash

அதிகாலையில்!
தெருவோரத்தில்!
கண் விழிக்காத!
நாய்க்குட்டிகள்!
தாயின் பால்காம்புகளில்!
முட்டி,முட்டி!
பால்குடித்துக்கொண்டும்!
குட்டிகளை!
நக்கி கொடுத்தபடியிருக்கும்!
தாய்நாயை பார்த்து!
ஆசையாய் ரசித்தபடி!
கோலமிட!
மனம் வராமல்!
பெருமூச்சு கலந்த!
ஏக்கமாய்!
நடுவிரலால் அடிவயிற்றை!
நிரடிப்பார்க்கிறாள்!
மலடி
கி.சார்லஸ்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.