விடுமுறைதினம் - காருண்யன்

Photo by Sajad Nori on Unsplash

=காருண்யன்= !
ஒவ்வொரு விடுமுறை நாளும் !
ஏறக்குறைய இப்படித்தான் ஆகிறது !
இந்த நாளை எப்படி !
வித்தியாசமாக்கலாமெனச் சிந்தித்தபடியே !
பதினொரு மணிவரைக்கும் கட்டிலிலிருப்பேன் !
நீந்தப்போகலாமா? தண்ணியடிக்கலாமா? !
பிள்ளைகளை வெளியேகூட்டிப்போகலாமா? !
யாராவது பெரியவர்களைப் போய்ப்பார்க்கலாமா? !
பாதியில்விட்ட கதையைப் பூர்த்தியாக்கலாமா? !
புத்தக அலமாரியைத் தூசுதட்டலாமா? !
போஸ்ட்டில் புதிய நூலேதும் வராதபோதும் !
முடிவுக்குவர முன்னாலே மதியம் திரும்பிவிடும் !
மனைவி பெரிய செலவொன்றையும் !
அறிவிக்காதவரையில் பர்ஸானது !
மிதக்குமா தாழுமா மனஞ்சுழல !
விஷ்கியும் சிக்கன் ஃப்றையுமா !
'றம்'குப்பியும் சாடின் மீனுமா !
இல்லை பியரும் கருவாடுந்தானா? !
எக்காலத்தும் எல்லோராலும் !
சபிக்கப்பட்டாலும் இருக்கும் !
சில்லறையுடன் எப்போதும் தன்னை !
அட்ஜெஸ்ட் செய்துபோவது !
இளவெடுத்த !
இந்தச் சோமபானந்தான்! !
03.07.2005
காருண்யன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.