என் இரண்டாவது தாய் - இராமசாமி ரமேஷ்

Photo by Kilimanjaro STUDIOz on Unsplash

என்னை வளர்த்தவர்களில்....!
இவள் என் இரண்டாவது தாய்!
நான் பள்ளிக்கு!
போகவேண்டும் என்பதற்காய்!
இவள்!
தன் பல்கலையை துறந்தவள்...!
தன் வியர்வை சிந்தி!
என் வாழ்வை!
விடிய வைத்தவள்!
அம்மா அடித்தாலும்!
அப்பா திட்டினாலும்!
அவர்களை ஏசிவிட்டு!
எனக்காக!
அத்தனைபேரிடமும்!
சண்டைபோட்டு!
எனக்கான தோழியாய் இருப்பவள்...!
எத்தனையோ!
எனக்குச் செய்து அக்காவே...!
நீ!
போரிலே இழந்துபோன!
தாரத்தை மட்டுமாவது!
மீட்டுத்தர என்னால் முடியவில்லையே
இராமசாமி ரமேஷ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.