ஒப்பாரும் மிக்காரும்...? - இமாம்.கவுஸ் மொய்தீன்

Photo by engin akyurt on Unsplash

பொது விடங்களில்!
துப்புவதிலும்!
நான்கு பேர் !
கூடியிருக்குமிடத்தில்!
மூக்கையும் சளியையும் சிந்தி!
அசுத்தப் படுத்துவதிலும்!
உண்ட வாழையின் !
தோலை வீதியில் !
வீசி எறிவதிலும்!
பொதுவிடங்களில் !
சுவர்களைத் தேடி!
சிறுநீர் அபிஷேகம் !
செய்வதிலும்!
எச்சத்தையும் மிச்சத்தையும்!
கண்ட இடங்களில்!
போடுவதிலும் நம்மை!
ஒப்பாரோ மிக்காரோ தான்...!
எவர்?!
-இமாம்.கவுஸ் மொய்தீன்
இமாம்.கவுஸ் மொய்தீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.