அன்னையைப் போற்றுவோம் - இ.ஜேசுராஜ்

Photo by engin akyurt on Unsplash

( அன்னையர் தினம் - மே -8 ) !
அவளும் நானும் ஓருயிர் ஓருடல் - ஆம் !
நஞ்சுக்கொடி அறுபடும் முன்னே !
நானும் தாயும்! !
உதிரம் உறிஞ்சும் ஒட்டுண்ணியாய் !
எனது பிறப்பு ! !
மழலையாய் உன் மடியில் நான்! !
கொடி போட்டு முடித்துவைத்தாய் !
எனை உன்னுள்! !
நீர்ப்பையில் சுமந்தாலும் !
நெருப்பு தருணங்கள்தான் உனக்கு! !
கொடியசைத்து துவக்கமே !
உலக மரபு ஆனால் !
கொடியறுத்து துவக்கிவைத்தாய் !
கருவறை துவங்கி என் !
கல்லறைப் பயணத்தை! !
பயணம்வரை உன் !
பாதம் விழுவேன் !
பாசமுடன் ஆசியளிப்பாய்! !
இருந்தும் ஒரு வரம் தருவாய் !
இன்னொரு பிறப்பிருந்தால் !
தாயே !
உன் மடித் தொட்டிலுக்கும் !
மார்புக் கட்டிலுக்கும் !
மழலையாய் நான் மறுபடியும்! !
!
அன்னையின் ஆசிவேண்டி !
.இ.ஜேசுராஜ்
இ.ஜேசுராஜ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.