எனதாக நீயானாய் - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Tengyart on Unsplash

ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான!
நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்!
சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான்!
செழிக்கிறேன் நானும் !
காலங்காலமாக மென்மையில்!
ஊறிக்கிடக்கும் மனமதில்!
எக் கணத்தில் குடியேறினேனோ!
இசைத்த கீதங்களின் ஒலியிலெனது!
இடர்கள் தீர்ந்தன!
உற்சாகத்தின் வீரியமிக்க விதைகள்!
உன் நம்பிக்கையின் கரங்களால்!
ஊன்றப்பட்ட நாளதில்தான்!
தூய சுவனத்தின் மழையென்னை!
முழுதும் நனைக்கப் பெய்ததையுணர்ந்தேன் !
கலக்கின்றதுயிரில்!
செவிகளுக்குள் நுழைந்த!
உனதெழில் பாடல்களினூடு!
ஆளுமைமிகு தொனி !
இரைத்திரைத்து ஊற்றியும்!
வரண்டிடா அன்பையெல்லாம்!
எங்கு வைத்திருக்கிறாய் உயிர் சகா!
காணும்போதெல்லாம் எழுமுன் புன்னகையின்!
கீற்றில்தான் உதிக்கிறது எனதுலகு !
மஞ்சள் பறவையொன்றும் சில அணில்குஞ்சுகளும்!
வாடி உதிர்ந்திடா மலர்கள் நிறைந்த!
சோலையில் விளையாடும்!
வசந்தகாலத்தின் காலையொன்றில்!
நானினி வாழ்வேன்!
ஒலிக்கும் இன்னிசையின் பிண்ணனியில்!
நீயிருப்பாய் என்றென்றுமினி
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.