இனிக் கனவு பார்க்கிலேன் - எசேக்கியல் காளியப்பன்

Photo by Jr Korpa on Unsplash

மழையாக வந்துநான் மனத்துளே இறங்குவேன்!
--மண்ணென ஏன்விழுந்தாய்?!
விளையாடும் தென்றலாய் கிளையாட்டி வருகிறேன்!
--வேரொடும் ஏன்சரிந்தாய்?!
குளிரூட்டும் மலருடன் கொடியெனப் படருவேன்;!
--குடைசாய்ந்து கருகினாய்,ஏன்?!
தெளிவான எண்ணமும் திடமான நெஞ்சமும்!
--தெரியாது சென்றமா னே!!
கோடையில் மழையெனக் கொட்டுவாய் என்றுநான்!
--கொண்டதும் பகற்கன வே!!
மேடையில் மாலையாய் மேல்விழு வாயென!
--மிக,நினைத் ததும்கன வே!!
ஓடையில் உன்னொடும் உருண்டதாய் என்னுளே!
--உணர்ந்த்தும் பொய்க்கன வே!!
பாடையில் மாலையாய் வந்து,நீ விழுவதாய்ப்!
--பார்க்கிலேன் இனிக்கன வே
எசேக்கியல் காளியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.