அவன் இல்லையென்று சொல்லுவதில்லை! - சுந்தரகுமார் கோவிந்தசாமி

Photo by Jr Korpa on Unsplash

முக்கனியின் சுவையே
முழுமதியின் ஒளியே
அந்தியில் பூக்கும் அல்லியே
அஸ்ஸாம் தேயிலையின் நறுமணமே!

கண்ணெதிரே தோன்றி
கணநேரத்தில் மறைந்தாயே கனவிலே கூட!
கனவிலேனும் என்னருகே இருந்திட என்ன தயக்கம்?

கணினி மொழி கற்ற தேனே
காதல் மொழி கற்க மறந்ததேனோ? (மறுப்பதேனோ?)

உன்
ஓரவிழிப் பார்வையிலே
ஓராயிரம் அர்த்தங்கள் !
புரியாத புதிர்களா?
விடுபடாத விடுகதைகளா?
புரியவில்லை என் சிற்றறிவுக்கு!

உடைந்த அப்பளமாய் உருக்குலைந்தது
என் நெஞ்சம் உன்னை காணாத வேளையில்!

இனியும் பொறுத்திடேன் இறைவா!

இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...!

தூரத்தில் பாடல் ஒலித்திட,
ஒலித்த திசை நோக்கி ஓடினேன் எதையும் தாங்கும் இதயம் வேண்டி !
சுந்தரகுமார் கோவிந்தசாமி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.