ரோட்டோரமாய் பல முறை !
ரோஜாச்செடிகள் வாங்கியதுண்டு. !
ஆனால், !
எப்போதும் என் வீட்டு செடிகள் !
கருத்தரிக்கும் முன்பே !
மரித்துவிடும்! !
எப்போதும் சண்டையிடும் உன் கோப !
விழிகள் !
எப்போதாவது மன்னிப்பு கேட்கும் நாள் !
போல, !
ஒருநாள் அதிகாலை - அது !
அரிதாய் பூப்படைந்தபோது, !
அன்று முழுவதும் !
பண்டிகை தினமானது எனக்கு. !
ஆம் !
என் வீட்டு பூக்களுக்கும், !
உனக்கும் சம்பந்தம் இருக்கிறது

சிவப்ரியன்