மீண்டிடுமா - செண்பக ஜெகதீசன்

Photo by engin akyurt on Unsplash

…!
----------------------!
01.!
போட்ட விதைதான் வருகுது!
புது வடிவில்,!
மண்ணில்-!
முளைத்துச் செடியாய்,!
பெண்ணில்-!
பேசும் மழலையாய்…!!
பாரிலுண்டு!
பல மொழிகள்,!
பல மொழிக்கும் முதல்மொழி!
பவளவாய் சிந்திடும்!
மழலைமொழி…!!
மகிமைகள் தெரிந்திருந்தும்!
மழலைகள் கிடக்குதே மண்ணில்,!
அது ஏதோ!
மௌனத்தில் மறைந்த உண்மை,!
மீண்டிடுமா இதிலிருந்து பெண்மை…!!
02. !
எண்ணி எண்ணி…!
நிலவே சாட்சி என்று!
சொன்னவன் சென்றுவிட்டான்!
என்!
நித்திரையைக் கெடுத்துவிட்டே,!
நித்தம் நித்தம்!
எத்தனை நாளைக்குத்தான்!
எண்ணிக்கொண்டிருப்பது!
மொத்தமாக!
இத்தனை நட்சத்திரங்களை…!!
ஏண்ணித் தீர்ந்தால்தான்!
அவன்!
என்னிடம் வருவானோ…!!
-செண்பக ஜெகதீசன்…
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.