மற்றுமொரு விடியல் - அறிவுநிதி

Photo by engin akyurt on Unsplash

செடியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட!
பூவாக சிரிக்கின்றான்.!
இரவு புலர்ந்த பின்னும் !
வழிநெடுக இருள் தொனிக்கிறது!
கண்கள் மூடி மூடி திறந்துகொண்டு!
இருள் மீது நடக்க !
பெரும் அச்சம் கொள்கிறான்!
வெளிச்சத்தல் நின்றுகொண்டு அவனால்!
இருளை மட்டுமே யாசிக்க முடிகிறது!
பகல் அவனது கனவாகிறது!
ஒரு முனைப்புடன் அடியெடுத்து வைக்கிறான்!
இருள் உடைய துவங்குகிறது!
எங்கிருந்தோ எழும் அலறல்கள் !
அவன் செல்லும் திசைகளை பயமுறுத்துகின்றன!
இருந்தும்!
திசைகள் விசாலமான அழைப்பை!
அவன் பாதங்களில் வைக்கின்றது !
அவன் ஆரவாரங்கள் திரண்டு தீப்பந்தமாகின்றான்!
தகிக்கும் இரவுக்கப்பால் !
அவனது உலகத்தை துவங்கிறது!
இன்னொரு வரியன்!
!
கவிதை: அறிவுநிதி
அறிவுநிதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.